தமிழகத்தில் அனைத்து வீடுகளுக்கான மின்சாரம் 100 யூனிட் வரை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. 100 யூனிட்-க்கு மேல் நாம் உபயோகிக்கும் மின்சாரத்திற்கும், மட்டுமே கட்டணம் செலுத்தி வருகிறோம்.
100 முதல் 200 வரை இருக்கக் கூடிய யூனிட் வரை ஒரு விகிதமும், 200 முதல் 500 யூனிட் வரை மற்றும் 500 க்கும் அதிகமான யூனிட் என்று பல விகிதங்களில் பிரிக்கப்பட்டுள்ளது.
உலகமே மின்சாரத்தின் மூலம் தான் இயங்கி வருகிறது. மாலை 6 மணி ஆனால் போதும் அனைவரின் வீட்டிலும் வெளிச்சம் வந்துவிடும். முற்காலத்தில், மனிதன் இரவில் வெளிச்சம் இல்லாமல் வாழ்ந்து வந்தான். டெக்னாலஜி வளரும் பொழுது தான் இந்த மின்சாரம் என்ற ஒரு கண்டுபிடிப்பு ஏற்பட்டது.

அதாவது மே 1931 ஆம் ஆண்டு இந்த மின்சாரம் நடைமுறைக்கு வந்தது. அதற்கு முன்னர் மக்கள் சீமண்ணை விளக்கு மற்றும் ஒளிவிளக்குகளை வைத்து, வாழ்ந்து வந்தார்கள். மின்சாரத்தின் தேவை அதிகரிக்கவே, அரசாங்கம் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற உத்தரவு விட்டது.
இந்நிலையில் அரசாங்கம் புதிய மின்சாரம் விதிமுறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பகல் நேரங்களில், அதிகம் மின்சாரத்தை பயன்படுத்துபவருக்கு 20 சதவீதம் கட்டணம் குறையுமாம்.